Pages

Monday, July 25, 2011

மும்பை குண்டுவெடிப்பில் தப்பிய ஹன்ஸிகா!

மும்பை குண்டுவெடிப்பிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார் நடிகை ஹன்ஸிகா. மும்பையில் தொடர் குண்டுகள் வெடித்தபோது அவர் உதயநிதியுடன் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' பட ஷூட்டிங்கில் இருந்துள்ளார். இந்த ஷூட்டிங் நடந்த இடத்துக்குப் பக்கத்தில்தான் குண்டு வெடித்துள்ளது.படப்பிடிப்பை முடித்து விட்டு ஹன்சிகா காரில் ஏறிப் புறப்பட்ட சில வினாடிகளில், அந்தப் பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உடனடியாக உறவினர்களையும் நண்பர்களையும் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார்.தான் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தார். கடவுள் அருளால் தப்பினேன் என்று அவர் தெரிவித்தார்.குண்டுவெடிப்பு குறித்து இயக்குநர் ராஜேஷ் கூறுகையில், "படப்பிடிப்பை முடித்து விட்டு ஹன்சிகா வீடு சென்ற வழியில்தான் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. நாங்கள் அனைவரும் படப்பிடிப்பு நடந்த இடத்திலேயே இருந்ததால் ஆபத்திலிருந்து தப்பினோம்," என்றார்.

0 comments:

Post a Comment