Pages

Saturday, July 23, 2011

பாலாவின் அடுத்த படத்தில் சரத்குமார்?! (Sarath Kumar to do Bala's Next?

 Sarath Kumar to do Bala's Next?பாலா இயக்குகிற படங்கள் எல்லாம் அப்படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு லாபமா, இல்லையா என்ற கேள்விகளுக்குள் நுழைந்தால், அது பெரிய சர்ச்சையாகிவிடும். ஆனால் அவரது படங்கள் தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத அடையாளங்கள். எனவேதான் பாலா படத்தில் நடித்தால் போதும். அதுதான் டுட்டோரியல், காலேஜ், யுனிவர்சிடி என்றெல்லாம் மதி மயங்குகிறார்கள் முன்னணி நடிகர்கள்கூட. ரொம்ப சீக்கிரம் பாலா படத்தில் நடிப்பேன் என்று கூறிவருகிறார் சீயான் விக்ரம். திரும்பவும் பாலாவுடன் ஒரு படத்தில் நடிக்க பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார் விஷால். ஆர்யாவோ, அண்ணன் என்னைக்கு அழைக்கிறாரோ அன்னைக்கு தண்ணி பார்ட்டிய்யா எல்லாருக்கும் என்று மெய் சிலிர்க்கிறார். இவர்களையெல்லாம் எதிர்பார்க்க வைத்துவிட்டு பாலா என்ன செய்து கொண்டிருக்கிறார்? விசாரித்தால் நமக்கே மெய்சிலிர்த்துப் போகிறது. அடிப்படையில் ரொம்ப ஸ்லோவான பாலா, படு சுறுசுறுப்பாக தனது அடுத்த படத்தை ஆரம்பிக்க போகிறாராம். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரும் நடிகர் சரத்குமாரும் சந்தித்திருக்கிறார்கள். பெரிய கெட் அப் எதுவும் தேவையில்லை. நீங்க அப்படியே வந்தால் போதும். ரெண்டு நாள் தாடி மட்டும் முகத்தில் தெரிஞ்சா போதும் என்றும் கூறியிருக்கிறாராம். தனது அடுத்தப்படத்தின் கதையை சுருக்கமாக சொன்னாராம். கதையை கேட்டு பிரமித்துப் போன சரத்குமார் பாலாவின் கையைப் பிடித்துக்கொண்டார் என்கிறார்கள். தற்போது இந்த சந்திப்பு பற்றி இது மரியாதை நிமித்தமானது என்று சரத்குமார் வட்டாரத்தில் கூறிவந்தாலும், பாலா தனது அடுத்தப்படத்தில் சரத்குமாரையும், புதுமுகம் இருவரையும் நடிக்க வைக்கப்போகிறார் என்கிறார்கள். மணல்ல குளிக்க சாருக்கு ஓ.கேதான் போல... ஆனா அந்த புது பசங்கள நெனச்சாதான் பாவமா இருக்கு.....

0 comments:

Post a Comment