Pages

Saturday, July 23, 2011

ரசிகர்களை சந்திக்கயிருக்கிறார் ரஜினி: சத்தியநாராயண ராவ் (Rajini to meet his fans next month)

 Rajini to meet his fans next monthதனது ரசிகர்களை அடுத்த மாத இறுதியில் சூப்பர் ஸ்டார் சந்திக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அவரது அண்ணனும், அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றத் தலைவருமான சத்தியநாராயண ராவ் தெரிவித்திருக்கிறார். ரஜினிகாந்த் பூரண குணமடைந்து திரும்பியதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ராகவேந்திரா ஆலயத்தில் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் 12 விதமான ஹோம பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ் கெய்க்வாட், அவரது மனைவி கமலா பாய், ரஜினி ரசிகர் மன்ற ரசிகர்கள் உள்பட பலரும் பங்கேற்றனர். இந்த யாகத்தின் போது 20 தம்பதியர்களுக்கு சுமங்கலி சீர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. அப்போது, சத்யநாராயணராவ் கெய்க்வாட் நிருபர்களிடம் கூறுகையில், "எனது சகோதரர் ரஜினிகாந்த் பூரண குணமடைந்து திரும்பியுள்ளார். எங்கள் பூர்வீக கிராமமான கிருஷ்ணகிரி அடுத்த வேப்பனஹள்ளி நாச்சிகுப்பத்தில் ஒரு ஆண்டில் பெற்றோர் நினைவாக மணிமண்டபம் கட்ட உள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் குறித்து ரஜினிகாந்துடன் பேசி முடிவு செய்வேன். தற்போது ரஜினிகாந்த் ஓய்வில் இருக்கிறார். ஓய்வெடுத்த பிறகு, அடுத்த மாத இறுதியில் தனது ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் அடுத்த மாதத்தில் துவங்கும். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். ரஜினி நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்த அத்தனை உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்," என்றார். அடுத்த மாச பூஜைக்கு இன்னிக்கே பிரசாதம் குடுத்திட்டீங்களே............

0 comments:

Post a Comment